முடியாட்சிக் காலத்தில் (கி.மு. 3ஆம் நூற்றாண்டில் இருந்து 1815 வரை) அரச சுவடிகள் கூடங்களுக்குப் பொறுப்பாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருந்ததுடன் ஹே மக்டோவாலின் 19 ஆம் நூற்றாண்டின் விபரங்கள் (19 century account), 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் கண்டிய இராச தானியில் இருந்த சுவடிகள் கூடத்தைப் பராமரிப்பதற்காக மஹாமொகொட்டி (Chief secretary) என அழைக்கப்படும் அலுவலர் இருந்தார் என்பது தெளிவாகின்றது.
1640 ஆம் ஆண்டில் சுவடிகள் கூடம் காலியில் இருந்ததுடன் 1656 தொடக்கம் 1796 வரை அது கொழும்பில் வைக்கப்பட்டிருந்தது. ஒழுங்கு முறையில் சுவடிகள் கூட்டத்தைப் பராமரிப்பது கி.பி.1640 தொடக்கம் 1796 வரை இலங்கையின் கடலோர மாவட்டங்களில் இருந்த ஒல்லாந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டது. சுவடிகள் காப்பாளர் (Archivist) பதவி 1901 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. பிரித்தானியரின் காலத்தில் காலனித்துவ / பிரதான செயலாளரின் அலுவலகத்தின் ஒரு பகுதியாக இருந்து வந்த சுவடிகள் கூடமானது 1947 ஆம் ஆண்டு அரச சுவடிகள் கூடத் திணைக்களமாக உருவாக்கப்பட்டது. சுதந்திர கால கட்டத்தில் 1973 ஆம் ஆண்டுச் சுவடிகள் கூடச் சட்டம் இல. 48 சட்டமாக்கப்பட்டதுடன் திணைக்களம் தேசிய சுவடிகள்கூடத் திணைக்களமாகப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.








